Sunday, December 5, 2010

நீ சம்மதித்தால்...!

Posted by K. Ezhil Kumar | Sunday, December 5, 2010 | Category: |

 

கால் வலிக்கும் வரை...
உன் விரல் பிடித்து நடக்க வேண்டும்!
இரண்டு வயது குழந்தையாக!

எப்போதும் உன்னிடம்
பேசிக்கொண்டிருக்க பிடிக்கும்...
அதை விட அதிகம் பிடிக்கும் பேசாமல்
உன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பது...!

நீ ரயிலுக்காக காத்திருக்கிறாய்
வந்து விட வேண்டுமென்று...
நான் பிரிவிற்காக காத்திருக்கிறேன்
வந்து விடக் கூடாதுஎன்று

என் இறக்கும் தருணம் உன் மடியில்
இருக்கும் தருணமாய் வரம் கொடு
உன் தோள் சாயும் உரிமையை
விட்டுத்தருகிறேன்...

                                                        நட்புடன்...
                                              ரேவதி

Currently have 0 comments:


Leave a Reply