 
பனிப்படர்ந்த
கண்ணாடிகளில் எல்லாம்
உன் பெயரால்
பூ செய்யும்
பைத்தியம் நான்
 
எனக்கு
உன்னை உணர்த்திக்கொண்டே
 இருக்கும்
என் துப்பட்டாவின்
உன் வாசம்
 
வார்த்தைகள்
இல்லா மொழி
'காதல்'
அதை வாசிக்கக்
கற்றுத் தந்தவன்
நீ..!!
 
வார்த்தைகளால்
வடிவமைக்கப்படாத
 காதல் ஒன்று
வெட்கம் பூசி
அலைந்தது
 
உனக்கான
என் கவிதைகள்
மீண்டும் எனதாக
வேண்டும்
காதல் செய்...
 மழையில் ஊறிய
மரக்கதவாய்
கனக்கிறது நெஞ்சம்
காதல் கொண்ட
கண்ணீரில்...!!
மழையில் ஊறிய
மரக்கதவாய்
கனக்கிறது நெஞ்சம்
காதல் கொண்ட
கண்ணீரில்...!! 
 
கண்கள் கோர்த்த
கண்ணீரை
கவிதையாக்கி
காகிதத்தில்
தூக்கிலிட்டேன்...
 
உன் பெயர் சுமந்த
பலகைக் கூட
காதல்
சின்னம் தான்
 
கற்பனை தொலைத்து
கவிதையா??
நீயில்லாமல்
 காதலா??
 
பசுமரமாய் இருந்த
 கவிதைகளெல்லாம்
கழுமரமாயின
இன்று
 காதலின் பிரிவால்...
 
உன்னால்
 தூக்கம் கெட்ட
என்னிரவுகள்
உட்கார்ந்திருக்கின்றன
வாசலில்
காதலை சபித்தபடி

 உடுத்திப்போட்ட
 உடையெனக்
களைந்துக்கிடக்கிறது
நம் காதல்
 திருத்தித்தர
உடனே வா....!!
நட்புடன்...
ரேவதி   
Currently have 0 comments: