Saturday, November 20, 2010

நிழலிலும் காதல்

Posted by K. Ezhil Kumar | Saturday, November 20, 2010 | Category: |

பெண்ணே !
நான் எழுதியக் கடிதம்
உன்னிடம் சேரும் முன்னே - நீ
மற்றவனை  கை பிடித்தாய்.....
 
பூக்கள் கூட காய்ந்து சருகாகிதான்
தூக்கி எறியப்படும் - ஆனால்
என் காதலோ மொட்டாகும் முன்பே 
சருகாகியது.....
 
மனதை தேற்றி  மறுநாள் 
நடந்தேன் சாலையில் 
நடந்த சாலையோ  பழகியதுதான் 
ஏனோ ஒரு வித்தியாசம்  - சற்று 
நின்று திரும்பும்போதுதான் 
தெரிந்தது என்னை பின் தொடர்ந்த 
நிழல் என்னிடம் இல்லை என்று ....
 
நிழலை தேடி திரிந்தேன்  - அங்கு
சாலையின் எதிர்புறம் நீ - உன்
கணவனோடு கைகோர்த்தபடி...
சற்று உற்று பார்தால் என்
நிழலோ உனக்கு குடையாக....
 
சூரியனின் பார்வை உன் மீது
விழாமல் உன்னை மட்டும்
தொடர்ந்தது என் நிழல் மட்டும்....
                                                        என்றென்றும் ,
                                                         பார்த்தா.....

Currently have 0 comments:


Leave a Reply