Tuesday, November 16, 2010

காதல் திருத்தம்

Posted by K. Ezhil Kumar | Tuesday, November 16, 2010 | Category: |

Join Only-for-tamil
பனிப்படர்ந்த
கண்ணாடிகளில் எல்லாம்
உன் பெயரால்
பூ செய்யும்
பைத்தியம் நான்



Join Only-for-tamil
எனக்கு
உன்னை உணர்த்திக்கொண்டே
இருக்கும்
என் துப்பட்டாவின்
உன் வாசம்


Join Only-for-tamil
வார்த்தைகள்
இல்லா மொழி
'காதல்'
அதை வாசிக்கக்
கற்றுத் தந்தவன்
நீ..!!



Join Only-for-tamil
வார்த்தைகளால்
வடிவமைக்கப்படாத
காதல் ஒன்று
வெட்கம் பூசி
அலைந்தது



Join Only-for-tamil
உனக்கான
என் கவிதைகள்
மீண்டும் எனதாக
வேண்டும்
காதல் செய்...



Join Only-for-tamil
மழையில் ஊறிய
மரக்கதவாய்
கனக்கிறது நெஞ்சம்
காதல் கொண்ட
கண்ணீரில்...!!


Join Only-for-tamil
கண்கள் கோர்த்த
கண்ணீரை
கவிதையாக்கி
காகிதத்தில்
தூக்கிலிட்டேன்...



Join Only-for-tamil
உன் பெயர் சுமந்த
பலகைக் கூட
காதல்
சின்னம் தான்



Join Only-for-tamil
கற்பனை தொலைத்து
கவிதையா??
நீயில்லாமல்
காதலா??



Join Only-for-tamil
பசுமரமாய் இருந்த
கவிதைகளெல்லாம்
கழுமரமாயின
இன்று
காதலின் பிரிவால்...



Join Only-for-tamil
உன்னால்
தூக்கம் கெட்ட
என்னிரவுகள்
உட்கார்ந்திருக்கின்றன
வாசலில்
காதலை சபித்தபடி



Join Only-for-tamil
உடுத்திப்போட்ட
உடையெனக்
களைந்துக்கிடக்கிறது
நம் காதல்
திருத்தித்தர
உடனே வா....!!

                                                                         நட்புடன்...
                                                                              ரேவதி  

Currently have 0 comments:


Leave a Reply