Monday, March 11, 2013

பென்சில் நுனியிலே கலைவண்ணம் கண்டார்.....

Posted by K. Ezhil Kumar | Monday, March 11, 2013 | Category: | 0 comments

பென்சில் நுனியிலே கலைவண்ணம் கண்டார்.....


Join Only-for-tamil

இப்படி ஆரம்பிச்சி.....

Join Only-for-tamil


Join Only-for-tamil


Join Only-for-tamil


Join Only-for-tamil


Join Only-for-tamil


Join Only-for-tamil


Join Only-for-tamil


Join Only-for-tamil


Join Only-for-tamil


Join Only-for-tamil




இணையத்திலிருந்து 

Join Only-for-tamil

இதுதான் அறிவின் முதிர்ச்சி

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments

Join Only-for-tamil

விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.

அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.

நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள்.

என்னைப் பார்த்ததும்
திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி.

அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப்
பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.

அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார்.என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதை விட
என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன்.

இன்று முதல் நான் உன்னை “தாயே” என்றே அழைக்கிறேன் என்று கூறினார்..


இதுதான் அறிவின் முதிர்ச்சி.....

ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட,அவரது மனத்தைக் காயப் படுத்தாமல்
மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு....

இன்றைய இந்திய தேசம்....

Posted by K. Ezhil Kumar | | Category: | 1 comments



Join Only-for-tamil
யுத்தமும், இரத்தமுமாய்
நிறைந்திருந்தாலும்
தேசம் சிறப்பாய்த்தான் இருந்தது
துரோகிகள் பிறக்கும் வரை..!

மன்னர் மணிமுடிகள்
தேசத்தை கோயிலாக்கி
அந்நிய தேசத்திடம்
அப்பாவியாய் மாட்டிக்கொண்டு
விடாப்பிடியாய் போரிட்டு
மாண்டுபோன பரிதாபம்...!!

கத்தியின்றி இரத்தமின்றி
கைக்கொண்ட சுதந்திரம்
சத்தமின்றி சுத்தமின்றி
சாகடிக்கும் நிலைமை...

"சாதிகள் இல்லையடி பாப்பா"
சான்றுரைத்த பாரதியையும்
பார்ப்பணன் என்று சொன்ன சமூகம்..!
கல்விக்கு வித்திட்ட கர்மவீரரையும்
காவு வாங்கிய சமூகம்...!

மாமன்னர்களும், மாவீரர்களும்
வள்ளல் பெருந்தகைகளும்
காகித ஏடுகளை காவல் செய்தனர்
காகத்திற்கும் கழுகிற்கும்
கழிப்பறையாய் நின்றனர்...!

கதிர்களெல்லாம் உதிர்ந்துபோக
பதர்கள் இங்கு பதவியில் ஏறின..
கிழக்கிந்திய நாகரீகத்தில்
இந்திய நாகரீகம் இறந்தே போனது...

கலாச்சார உடையிங்கு
கைக்குட்டையாய் சுருங்கியது
கதவுகளை சாத்திக்கொண்டு
காற்று வாங்கி களிப்படைகின்றனர்....

காளையர்களும், யுவதிகளும்
இணையம் வழியே
இச்சையை தீர்த்துக்கொண்டு
கொச்சையாய்ப் போகின்றனர்...

உணவு கொடுத்தவர்கள் வீதியிலும்
உண்டு கொழுத்தவர்கள் மாடியிலும்
புறம்போக்கு நிலமெல்லாம் புறம்போக்கிடம்
நடைமேடையெல்லாம் நலிந்தவர்களிடம்

ஒரு துளி மையை நம்பி
ஒற்றை விரலால் வாழ்வை
உள்ளூர் ஒற்றர்களுக்கே
அடமானம் வைத்த அப்பாவிகள்..!

தன்நிலை மறந்த தமிழரினமும் - இன்று
குருடாய், செவிடாய், ஊமையாய்
இவர்களின் சதையெல்லாம்
இங்கு வெறும் கதையாய்....

கதைக்குக் காரணமாவதற்கு முன்
தேசம் வளர்வதற்கு விதையாவோம்
கதிர்களாய் இருந்து விளைச்சல் தருவோம்
பதர்களை பயணத்திலேயே முறியடிப்போம்...!!



பிரியமுடன்
பிரேமி
c.premalatha59@yahoo.com>, 

கண்ணதாசனின் பொன்மொழிகள்

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments

கண்ணதாசனின் பொன்மொழிகள்


அறிவாளிகளின் குழந்தைகள் பெரும்பாலும் முட்டாளாகவே

வளர்கிறார்கள், நிழலிலே வளரும் செடி சோகையாக இருப்பது போல



பெர்னாட்ஷா வை நினைத்து கொண்டு தன்னை கண்ணாடியில்

பார்ப்பவர்கள், நடிகையை நினைத்து கொண்டு

மனைவியை கட்டிபிடிப்பவர்கள் ஆவர்



கண்களை மூடுங்கள், காதுகளை அடைத்து கொள்ளுங்கள்

இதயத்தையும் மூடுங்கள், செய்துவிட்டீர்களா?

சபாஷ், நீங்கள் அரசியல் வாதியாகிவிட்டீர்கள்



ஒரெ ஒரு அற்பனை சமாளிப்பது  - சர்வாதிகாரம்

ஒவ்வொரு அற்பனையும் சமாளிப்பதுதான் ஜனநாயகம்



விளக்கமாக பேசு, முடிவில் சிந்திக்கும் போது உனக்கே

குழப்பம் வரவேண்டும் அதுவே சிறந்த பேச்சு



அன்பிலே நணபனை வெல்லுங்கள்

களத்திலே எதிரியை வெல்லுங்கள்

பண்பிலே சபையை வெல்லுங்கள்

மஞ்சதிலே மனைவியை வெல்லுங்கள்



மூட்டையை கொடுத்து காசு வாங்குவான் சம்சாரி

காசு கொடுத்து மூட்டையை வாங்குவான் வியாபாரி

எதையுமே கொடுக்காமால் எல்லாத்தையும்

வாங்குவான் அரசியல்வாதி



தனியாக அழுங்கள், கூட்டத்தோடு சிரியுங்கள்

கூட்டத்தோடு அழுதால் நடிப்பு என்பார்கள்

தனியாக சிரித்தால் பைத்தியம் என்பார்கள்



உலகத்திலுள்ள எல்லோருமே யோக்கியர்தான்

தூங்கும்போது மட்டும்



காதலிக்கும் போது குழந்தையாயிரு அப்போதுதான் அவள்

ஏமாற்றும் போதும் சிரித்துகொண்டே இருப்பாய்



கட்டாயம் காதல் செய்யுங்கள் - ஏனெனில்

சந்தோசம் மட்டுமே வாழ்க்கையல்ல



 விதியையும் மதியால் வெல்லலாம்

என்று உன் விதியில் எழுதியிருந்தால்



யார் என்ன நினைக்கிறார்களோ என்று நினைத்து கொண்டே இருந்தால்

நாம் என்ன நினைக்கிறோம் என்பதற்கு மரியாதையே இல்லாமல் போகும் 




Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments


ஒரு வணிக நிறுவனத்தின் முன் பகுதியில்...
--------------------------------------------------------------------------

நட - அதிர்வின்றி

பேசு - பணிவாக

சுவாசி - ஆழமாக

தூங்கு - அமைதியாக

உடுத்து - அழகாக

செயல்படு - அச்சமின்றி

உழை - உண்மையாக

சிந்தி - சுயமாக

நம்பு - சரியாக

பழகு - நாகரிகமாக

ஈட்டு - நேர்மையாக

சேமி - சிறிதாவது

செலவிடு - யோசித்து

படி - முடிவின்றி

மரணி -பயமின்றி



இணையத்திலிருந்து 
முரளி சுப்ரமணியம்.

மலர்களே.....

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments


மலர்களே.....
*********************
Inline image 1

இலைகளுக்கிடையில் நின்றே
இரு(ற)ந்து போகும் வாழ்வைச் சொன்னாய்
இறைவனின் பாதத்தில் நின்றே
இருக்குமிடம் சிறப்பித்தாய்
இறங்கிவரும் பனியைத் தாங்கி
இறுமாப்பின்றி இருந்தாய்...
முட்களுக்கிடையே நின்றே
இரணங்களைத் தாங்கி வந்தாய்..
மலர்வதும் உதிர்வதுமாய் நின்றே
வாடிக்கையாய் வைத்திருந்தாய்
இருக்குமிடமெல்லாம் மணமாய்
மலர்ந்தே மௌனித்திருந்தாய்..
உன்னை விரும்பும் வண்டுக்கே
வாழ்வளித்து வாழ்ந்தாய்..
நிலமகள் மேனி மீதே
நிறம் நிறைந்த ஓவியம்போல்
நிலைத்திருந்த மலர்களென்றே
பெயரிட்ட பேரதிசயமே
உன்னைப்போல நானும்
இருந்து இறந்திட வாழ்த்துவாயே...


பிரியமுடன்,
பிரேமி

யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

Posted by K. Ezhil Kumar | | Category: | 1 comments


 

அறிவாளியை உண்மையால் வெல்ல வேண்டும்.

முட்டாளை நடிப்பினாலும்,....நமக்குச் சமமானவர்களை திறமையாலும் வெல்ல வேண்டும்.

குழந்தைகளை இனிப்புத்தின்பண்டங்களைக் கொடுத்து வசப்படுத்திட வேண்டும்.

வயதானவர்களை மரியாதையால் மேன்மை செய்ய வேண்டும்.

தற்பெருமை மிக்கவர்களை புகழ்ச்சியால் புகழ்ந்து பேசி அடக்க வேண்டும்.

ஒழுக்கமற்ற நபர்களை வஞ்சகத்தினால் வெல்ல வேண்டும்.

திமிர் பிடித்தவர்களை வணக்கத்தாலும்,...வீரனை தைரியத்தாலும்,

குருவை பணிவான அன்பினாலும்,...மகான்களை சரணாகதி அடைந்தும் நன்மை பெற வேண்டும்.

ஆக,முழுக்க முழுக்க உண்மை பேசியும்,100% நேர்மையாகவும் இந்த கலிகாலத்தில் வாழ முடியாது; நீங்களும் அப்படி நடக்க முயல வேண்டாம்;மற்றவர்களிடமும் இப்படி எதிர்பார்க்க வேண்டாம் 


நீ எதை நினைக்கிறயோ அதுவாகவே ...

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments

ஒரு மனிதனின் மனதில் பல்லாயிர எண்ணங்கள் உருவாகும்.அதில் தாழ்வு எண்ணங்கள்,எதிர்மறை எண்ணங்கள்,பலவீனமான எண்ணங்கள்,முரட்டு எண்ணங்கள்,அன்பு,தெய்வீகம்  என பல உயர்ந்தும்,அதே வேலையில் தாழ்வான எண்ணங்களும் அதே  மனதில்தான் உருவாகின்றன.

Join Only-for-tamil


மனோதத்துவ ஆராய்ச்சியின்படி ஒரு மனிதன் எதை நினைக்கிறானோ,அதுவகவேதான் உருவாகிறான் என்பதை கண்டறியப்பட்டிருக்கிறது. இதைத்தான் நம் முன்னோர்கள் "விதைப்பதே விளையும்" என்றார்கள்.நாம் நம் வாழ்க்கையில் உயர்ந்து ஒளி வீச நம் மனம்தான் ஆணிவேர்.உயர்ந்த எண்ணங்களை விதைத்து வாழ்வில் உயர வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் உழைத்தல் நிச்சியம் வெற்றி கோட்டையை அடையலாம்.தவறான எண்ணங்களை மனம் யோசித்தால் தவறான வழிகளைத்தான் அறிவு தரும்.

 Join Only-for-tamil

நம் எண்ணங்கள்  எப்பொழுதும்  சுத்திகரிக்கப்பட்டு புனிதமாக இருக்க வேண்டும்.எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது.எண்ணம் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் வாழ்விற்கு  நல்லது.நீங்கள் ஒவ்வொருவரும்  இரவும் பகலும் ஓடி ஓடி வேலை செய்து சொத்து,மட மாளிகை,புது மாடலான வண்டி வாகனங்கள்,பொன் பொருள் என வாழ்கையில்சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.நிலம் உள்ளவர்கள் நிலத்தை சுத்தம் செய்து உறமிட்டு நீர்பாய்ச்சி,பயிரிடுகிறார்கள்.எத்தனை பேர் மனதை உழுது நல்லெண்ணங்களை விதைத்து ,போட்டி,பொறாமை,புறம் பேசுதல்,பிறருக்கு கேடு விலைவித்தல் என்ற எண்ணங்களை களையெடுத்து உள்ளன்போடு பழகுதல்,உண்மையாக உழைத்தல்,எதையும் எதிர்பாராமல் உதவி புரிதல் என்ற பண்புகளுடன் வாழ்கிறார்கள்.  இப்படி வாழக்கூடியவர்கள் வாழ்க்கையில் எப்போதும் சந்தோசமாகவும்,உற்சாகத்துடனும் வாழ கற்றுக் கொள்கிறார்கள்.
Join Only-for-tamil

எண்ணம் அணுகுண்டை விட ஆற்றலுள்ளது என்று கூறினால் எத்தனை பேர் நம்புவீர்கள்?ஏனென்றால் அணுகுண்டை செய்யக்கூடிய  ஆற்றல் உருவானதே எண்ணத்திலிருந்துதானே!மனம் எண்ணியதினால்தான் அறிவு செயல்பட்டு அணுகுண்டு உருவானது.
 

 Join Only-for-tamil

ஒரு எண்ணத்தை நம்பிகயுடேன் பலமுறை மனதில் நினைத்தால்,அது நல்லதோ,கேட்டதோ அது நடந்தே தீரும். ஆகையால் நல்லதும் கேட்டதும் நடப்பது நாம் எண்ணும் எண்ணங்களினால்தான்,"நீ எதை நினைக்கிறயோ அதுவாகவே மாறி விடுகிறாய்"என்பதை நீங்கள் கேள்விப்பத்டிருப்பீர்கள். உங்கள் எண்ணம் உறுதியாக இருந்தால் இயற்கையே உங்களுக்கு உதவி கரம் நீட்டி உதவி புரியும் என்பது உறுதி.

வழிகாட்டிகளின் எழுத்துகள்

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments



 உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடல் நிலைப்பதில்லை
உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு
விலகுவதுமில்லை - கௌதம புத்தர்
 

Join Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamil


கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே
கொடுத்துகொள்ளூம் தண்டனை - கௌதம புத்தர்
 


Join Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamil


தூக்கத்தில் இருப்பவனை எழுப்பாதே - அப்போதுதான்
அவன் பாவம் செய்யாமல் இருக்கிறான் - கௌதம புத்தர்
 

Join Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamil


குறை இல்லாத மனிதனும் இல்லை
குறை இல்லாதவன் மனிதனும் இல்லை
அதை குறைக்க முடியாதவன் மனிதனே இல்லை – கௌதம புத்தர்


Join Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamil

 
அன்புதான் உனது பலவீனம் என்றால்
நீதான் இந்த உலகின் மிகப்பெரிய பலசாலி – விவேகானந்தர்
 

Join Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamil


தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு
இல்லையேல் இந்த உலகம் உன்னை புதைத்து விடும் – விவேகானந்தர்


Join Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamil

 
உலகத்தில் மனிதனால் முடியாதது எதுவுமில்லை - மனிதனால்
முடியாதது மனிதனாக இருப்பது மட்டும் தான் - விவேகானந்தர்
 

Join Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamil


சரியோ தவறோ இதயம் சொல்வதைச் செய் ஏனென்றால்
விளைவுகளை தாங்கும் சக்தி அதற்குதான் உண்டு - விவேகானந்தர்
 

Join Only-for-tamil

  
இப்படிக்கு 
அ.கணேஷ் 


இப்படியும் சில பழமொழிகள்

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments



இப்படியும் சில பழமொழிகள்
 

Join Only-for-tamil


* எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்

* ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்

* ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பாலம்

* ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்

* கார் ஓட டயரும் தேயும்

* சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு

* சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை

* தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்

* தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்

* துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பொரியது

* பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல

* மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்

* முடியுள்ள போதே சீவிக்கொள்

* பழகின செறுப்பு காலை கடிக்காது

* மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி

* ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே

சவிதா 

சமுதாயத்தில் இந்த 10 பேர்

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments

பஸ் கண்டக்டர்- நம் அப்பா..அம்மாவிற்கு பிறகு..முன்னேறு..முன்னேறு..என்று நம் முன்னேற்றத்தில் குறியாய் இருப்பவர்.

முடிவெட்டுபவர்-நமக்குள்ள தலைக்கனத்தைக் குறைப்பவர்

பால்காரர்-நாட்டில் தண்ணீர் பஞ்சம் இவருக்கு மட்டும் வரவே வராது

ஆசிரியர்-தூக்கம் வராமல் அவதிப்படுபவர் இன்னலை தவிர்ப்பவர்

அரசியல்வாதி-பொய் வாக்குறுதி கொடுப்பதை சொல்லித் தருபவர்

நண்பன்-தேவைப்பட்ட போது கடன்கொடுப்பவன்

டாக்டர்-நம்மிடம் உள்ள பணத்திற்கேற்ப நம் வியாதியை தீர்ப்பவர்

மகன்/மகள்- பணம் தேவை என்னும் போது நம் சொல்படி நடப்பவர்கள்

வேலைக்காரி-நம் ஏரியா செய்திகளை முந்தித் தரும் தினத்தந்தி

மனைவி- அடடா..நாம ஏதாவது சொல்லப்போக..இன்னிக்கு சாப்பாடு கட் ஆயிடும்...ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்



தமிழ் தாயகத்துக்காக
சாய்பாபா..

உலகெனும் வீட்டில் அனைவரும் உறவினர்

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments



Join Only-for-tamil 


வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் வழிமுறைகள்

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments


வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர்(ulcer) நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். இது வாய்துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணங்கள்.


மருத்துவ ரீதியான காரணங்கள்:

01. தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் infection ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

02. உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள்

03. ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும் இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Re-flux என்பார்கள்.

04. அஜீரணக் கோளாறுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக்குழாயில் சென்ற உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிடும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவுமண்டலத்திலேயே உணவு தங்கும்போது வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக வந்து சேரும்.

மற்ற காரணங்கள்: 

புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு.

வாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து :

1. உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப்பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது சூயிங்கம், mouth Freshener ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

2. mouth washer நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்ப்டுத்திக்கொள்ளலாம்.

3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவதுபோல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.

4. அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர் நாற்றம் நீங்கும்.

5. வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டு கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.

6. குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.

7. காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க்கொப்புளிக்க வாய் துற்நாற்றம் நீங்கும்.

8. வேறு சில காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். நன்றாக துலக்கப்படாத பற்களின் இடுக்குளில் கிருமிகள் சேர்வதால் இந்த துர்நாற்றம் ஏற்படும். எனவே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பற்களை சுத்தம் செய்துகொள்ளவதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அத்தோடு பற்களின் பாதுகாப்பும் பலப்படும்.

9. அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

10. சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை(Coriander leaves) வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.


தமிழ் தாயகத்துக்காக
சாய்பாபா..

தத்துவம்'S

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments


சொல்ற தத்துவம் புரிஞ்சா புரிஞ்சுக்குங்க... 
புரியாட்டியும் நீங்களே ஏதாச்சும் புரிஞ்சுக்குங்க....


தத்துவம் 1

"காதல் பண்ணுறவனுக்கு காதலிதான் அழகு...
காதல் பண்ணாதவனுக்கு அழகானவ எல்லாம் காதலி..."


தத்துவம் 2

"காதலிக்கற பொண்ணையே கல்யாணம்
பண்ணிக்க முடியும்னு சொல்ல முடியாது..
கல்யாணம் பண்ணினவன் எல்லாம்
பொண்டாட்டியத்தான் காதலிப்பான்னு
சொல்ல முடியாது..."



தத்துவம் 3

"எல்லா பொண்ணும் அழகா தெரிஞ்சா
அது ஜொள்ளுடா...
ஒரு பொண்ணு மட்டும் அழகா தெரிஞ்சா
அது காதல்டா...."


தத்துவம் 4

"பொண்டாட்டிய மட்டும் காதலிக்கணும்னு
நெனைக்கறது பொம்பள புத்தி...
காதலிக்கிற எல்லாரையும் பொண்டாட்டியா
நெனைக்கறது ஆம்பளை புத்தி..."



தத்துவம் 5

"காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணுறவன் அதிர்ஷ்டசாலி
கல்யாணம் பண்ணுன பொண்ணையே காதலிக்கறவன் புத்திசாலி..."


தத்துவம் 6

"ஏன்னா அவ அழகுன்னு சொல்லுறவன் லோக்கல் லவ்வர்..
ஏன்னா அவ என் காதலின்னு சொல்லுறவன் True லவ்வர்..."


தத்துவம் 7

"காதலிய பொண்டாட்டி ஆக்க
முடியலைனா பொண்டாட்டிய
காதலி ஆக்கிக்குங்க...."


தத்துவம் 8
"கல்யாணத்துல காதல் முடியலாம்... ஆனா
காதல் கல்யாணத்துலதான் முடியனும்னு இல்லை..."



தத்துவம் 9

"அதிகமான பொண்ணுக பின்னாடி சுத்துனவனும்
ஒரே பொண்ணோட செட்டில் ஆனவனும்
சந்தோசமா இருந்ததா சரித்திரம் இல்லை..."

தமிழ்த் தாயகத்திற்காக
சவிதா செல்வராஜ் 

வெளிநாட்டு கணவன்...

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments


வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து 
முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது
காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு 
கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!

சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு
கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ 
தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும்
சின்னப்பையனைபோல... மடியில் 
படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !
மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... 
கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்

கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனைத் தீயில் தள்ளி வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாய்...
என் துபாய் கணவா! கணவா - எல்லாமே கனவா?

கணவனோடு இரண்டு மாதம்... 
கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 
5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்... .....
2 வருடமொருமுறை கணவன் ...
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
இது வரமா ..? சாபமா...?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... 
முகம் பூசுவோர் உண்டோ ?
கண்களின் அழுகையை... 
கண்ணாடி தடுக்குமா கணவா?
நான் தாகத்தில் நிற்கிறேன் - 
நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - 
நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... 
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... 
எனக்காக நீ உழைத்து...

தாமதத்தில் வரும் தவிப்பு... 
தூங்குவதாய் உன் நடிப்பு...
வார விடுமுறையில் பிரியாணி.... 
காசில்லா நேரத்தில் பட்டினி...
இப்படிக் காமம் மட்டுமன்றி 
எல்லா உணர்ச்சிகளையும் 
நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்
இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் ,
உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்து விட்டது கணவா!

தவணைமுறையில் வாழ்வதற்கு 
வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு 
நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
விரைவுத்தபாலில் காசோலை வரும்
 காதல் வருமா ?
பணத்தைத் தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?
நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு 
ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு 
அதிகமாகிவிட்டதால்
விமான நிலையத்திலேயே 
விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... 
நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?

பாலையில் நீ! வறண்டது என் வாழ்வு!
வாழ்க்கை பட்டமரமாய் 
போன பரிதாபம் புரியாமல்
ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த
 புகைப்படம் அனுப்புகிறாய்!
உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - 
என் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு - 
அந்த கடவுச்சீட்டு வேண்டாம்...
கிழித்துவிடு!
விசாரித்து விட்டு போகாதே கணவா 
விசா ரத்து செய்துவிட்டு வா!


இணையத்திலிருந்து 
பஷீர் 

ஒரு சின்ன ப்ளாஷ் பேக்

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments



 

கொஞ்ச நாளாவே என் மனைவி அலுப்போடு  சொல்லிக்கொண்டிருக்கிறாள்.....
"நீங்க முன்ன மாதிரி இல்லங்க  ரொம்பவே மாறீட்டீங்க...!?"

மனைவிக்காக எவ்வளவோ விஷயங்களை விட்டுக்கொடுத்த 
நான்...இந்த புலம்பலுக்கான 
காரணம் புரியாமல் நான் திண்டாடிக்கொண்டிருக்கிறேன்....



ஒரு சின்ன ப்ளாஷ் பேக் 

 
சிகரெட் பிடிக்காதிங்க ரொம்ப நாத்தம் அடிக்குது 

நான் சிகரெட் பிடிப்பதை அடியோடு விட்டுவிட்டேன்  



பாக்கு போடாதிங்க என்றாள்  

நான்  பாக்கு போடுவதை நிறுத்தினேன் 



என்னங்க...நீங்க வண்டிய ரொம்ப வேகமா ஓட்டுறிங்க,வேணாம் மெதுவாவே ஓட்டுங்க
 

நான்  வண்டியை மெதுவா ஓட்டுவதையே  வழக்கமாக்கினேன்.. 



உங்க தலை முடி சீராக இல்லை..குரங்கு தலை மாதிரி இருக்கு.. கொஞ்சம் சீர்படுத்துங்க.. 

உடனே முடித்திருத்துபவரிடம் போய் முடியை சீர் செய்தேன்..


ஆபிஸ் முடிஞ்சதும் பிரண்ட்ஸ் கூட அரட்டை அடிக்காம வீட்டுக்கு வாங்க சீக்கிரம்..

பல வருட பழக்கத்தை மனைவிக்காக மாற்றினேன்..


பக்கத்துவீட்டு பார்வதி வீட்டுல பெரிய டீவி வாங்கிருக்காங்க ...நமக்கும் அது மாதிரி ஒன்னு..

அடுத்த நாளே பெரிய டிவியை வாங்கி வைத்தேன்...



இப்படி..அப்படின்னு சொன்னதெல்லாம் செய்தேன்...

கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தேன்...

சில மாதங்களுக்கு பிறகு 
.
.
.
.
.
.
.

.

.

.

.

.

.

.

.
என்னங்க..... 
நீங்க முன்ன மாதிரி இல்லங்க  ரொம்பவே மாறீட்டீங்க...!? 

எனக்கு ரொம்ப போரடிக்குது..உங்க கிட்ட சண்டை போடவே முடியலை.


இந்த கொடுமைய நான் எங்க பொய் சொல்ல?
Join Only-for-tamil
ஆண்பாவம் உங்களை சும்மா விடாது பாத்துக்கோங்க..
என்  கண்ணீருக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்.


Join Only-for-tamil
உதவி:SS ராஜ்.







Join Only-for-tamil
__._,_.___