Saturday, December 4, 2010

என் அம்மாவிற்கு எழுதிய பிறந்த நாள் வாழ்த்து

Posted by K. Ezhil Kumar | Saturday, December 4, 2010 | Category: |


  Join Only-for-tamil

எத்தனை சொந்தம் என் வாழ்வில்  
வந்தாலும் அம்மா 
உன்  ஒற்றை பார்வையின்  பந்தம் 
எதுவும்  தந்ததில்லை  

உன்  கண்ணீரை  எல்லாம்  சிரிப்பில் 
மறைத்தாய்  அம்மா 
இத்தனைநாளும்  அது  எனக்கு 
விளங்கியதில்லை 


நான் வளரும்  ஒவ்வொரு  நொடியும்  
உனக்கு  பாரம்  தான்  
தெரிந்தும்  சுமக்கிறாய் 
பத்து  மாதம்   வரை  அல்ல 
உன்  ஆயுள்  காலம்   வரை 


உன்  காலம்  நரைக்கும்  நேரத்தில்
என்  நேரம்  உனக்காய்  
இருக்க  போவதில்லை 
தெரிந்தும் 
காக்கிறாய்  உன் 
இமைக்குள்  வைத்து என்னை 
கடமைக்காக   அல்ல 
கடனுக்காக   அல்ல 
கடவுளாக 

உன் வாழ்வின்  ஒரு பாதி  
உன்  பெற்றோருக்காய்  
மறு  பாதி   உன்  பிள்ளைகளுக்காய்    
மனதார  பகிர்ந்தளித்து  விட்டா் 
என்றாவது  உனக்காய்   வாழும் 
உத்தேசம்  உண்டா  

உன்  அன்னைக்கு என்ன  கைமாறு 
செய்தாலும்   உன்னை  எனக்கு 
தந்ததிற்கு ஈடாய்      
ஒன்றும்  செய்ய  இல்லாமல் 
முடமாய்   நிற்கிறேன் 


ஏழு ஜென்மங்களில்  நம்பிக்கை  இல்லை 

இனி  ஒரு  ஜென்மம்   
இருந்து உயிரினமாய்   பிறந்தால் 
உன்னை  எந்தன் மகளாக்கும்  பாக்கியம்    
மட்டும்  போதும் 

ஒரே  ஒரு வேண்டுகோள்  உன்னிடம்   
இன்று  மட்டுமாவது 
உனக்காய்  வாழ   முயற்சி  செய் 


என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Currently have 0 comments:


Leave a Reply