Saturday, November 13, 2010

கற்பனை வாழ்வு கனவு ....... Karpanai Vaalvu

Posted by K. Ezhil Kumar | Saturday, November 13, 2010 | Category: |

 
கனவு,
கண்களுக்கு நிதம்
அளிக்கப்படும் ஒரு
உணவு....

மூளை மேடையில் கண்கள்
நிகழ்த்தும் ஓர் கற்பனைக்
காவியம்....

விடிந்ததும் முடிந்துவிடும்
ஒரு சரித்திர சகாப்தம்.....

கால்கள் வலிக்காமல் பயணம்,

ஒரு நொடியில் மரணம்,
சில நொடியில் வாழ்க்கை,

திரும்பிடும் பந்தம் ,
திரும்பாத சொந்தம்,
எதிர்பாராத ஏக்கம் ,

உணர்ச்சிகளுள் சிக்கித்தவிக்கும்
உண்மையிலா ஒருமாய
வாழ்வு....

சொந்த கற்பனைகள்
கலவாத காரிருள் நண்பன்!

கண்கள் திறந்ததும்
கவலையில் கண்ணீர் சிந்தும்

கற்பனைகள் மெச்சிய
வாழ்வு ! கனவு !

Currently have 0 comments:


Leave a Reply