Saturday, December 4, 2010

நீ வருவாய் என !

Posted by K. Ezhil Kumar | Saturday, December 4, 2010 | Category: |


நினைத்து பார்கிறேன்  நீயும்
நானும் நடந்த இடங்களை
நடந்து செல்கிறேன்
அங்கு நான் மட்டும் தனியாக
என் நிழலாய் நீ வருகிறாய் என

நினைத்து பார்கிறேன் நீயும்
நானும் சுற்றித்திரிந்த இடங்களை
சுற்றுகிறேன்
அங்கு நான் மட்டும் தனியாக
தூரத்தில் தெரிவது நீயா என

நினைத்து பார்கிறேன் நீயும்
நானும் அமர்ந்து பேசிய இடங்களை
பேசுகிறேன்
அங்கு நான் மட்டும் தனியாக
காற்றாக என்னோடு பேசுவாய் என

நினைத்து பார்கிறேன் நீயும்
நானும் பேசிய வார்த்தைகளை
நினைதுக்கொள்ள்கிறேன்
அங்கு நான் மட்டும் தனியாக
நிஜமாக என்னோடு பேசுவாய் என

நினைத்து பார்கிறேன் நீயும்
நானும் பிரிந்த நிமிடங்களை
பிரிந்து செல்கிறேன்
அங்கும் நான் மட்டும் தனியாக
என் இறப்பிற்க்காவது நீ வருவாய் என

Currently have 0 comments:


Leave a Reply