Sunday, December 5, 2010
                     
எனக்குள் மலரும் கற்பனைகளை
கண்திறந்து கவிதையாக வடிக்கிறேன்.
ஒவ்வொரு வார்த்தைகளையும்
தேடித்தேடி கோர்வையாக்குகிறேன்
அனைத்திலும் உன் பெயர் தான் வடிவமைகிறது.
நிசப்தமான நேரங்களில் ஏனோ
உன் பெயரை உரக்கக் கூற சொல்கிறது என் மனம்.
ஆனால் மௌனத்தை காயப்படுத்தாமல்
உதட்டுக்குள்ளே முணுமுணுக்கிறேன்.
தனிமையிலும் இனிமையாக உன்
பெயரை சத்தமின்றி பாடலாக துதிக்கிறேன்.
ஒரு வார்த்தை அடங்கிய உன் பெயரை
இடைவெளியில்லாமல் உச்சரிக்கிறேன் அவை யாவும்
நெஞ்சமெல்லாம் நிறைந்த நிமிஷங்களாக இனிக்கின்றன.
                                                                                                  அன்புடன்...
ஸ்ரீமாரியா.
ஸ்ரீமாரியா.
Subscribe to:
Post Comments (Atom)
 
 
Currently have 0 comments: