Sunday, December 5, 2010

தமிழ் ஜோக்ஸ்

Posted by K. Ezhil Kumar | Sunday, December 5, 2010 | Category: , |

மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்
அப்பா: ஒண்ணுமில்லை
மகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில்
மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான்.
ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.
அப்பா: ???????
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார்.
அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்கு தெரியாது.
ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.
முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.
அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார்.
விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..
"கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!"
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம்!
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார்!!!!
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
கோபால் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?
ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?
கோபால் : நான் HOME WORK செய்யலை சார்!
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
நெப்போலியன் :- என்னுடைய அகராதியில்
முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது
சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம்,
வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
முன்னவர் : ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு
இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!
பின்னவர் : எப்படி?
முன்னவர் : என் மனைவியை நான் ஆசைப்பட்டுத்
தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

நட்புடன்
பொறிஞர் வி.நடராஜன்

Currently have 1 comments:

  1. எனது தமிழ் தாயக பதிவை தங்கள் வலைப்பூவில் பகிர்ந்தமைக்கு நன்றி.

    என்றும் நட்புடன்
    பொறிஞர் வி.நடராஜன்
    http://vnrcud.blogspot.com/


Leave a Reply