Sunday, December 5, 2010

அகதிகள் முகாம்...

Posted by K. Ezhil Kumar | Sunday, December 5, 2010 | Category: | 0 comments
  கூடுவிட்டுக்கூடுப் பாய்ந்த நாங்கள்இன்றுக்கூண்டுக்கிளியாய்;ஒரு கூடாரத்திற்குள்! கொடுக்கும் உணவைஉண்ண முடியாது;உண்டாலும் பசித் தீராது;எண்ணைப் படா சிகையும்;எண்ணிலடங்கா நோயும்;சொத்துக்கள் இழந்து;சோகத்திற்குச் சொந்தமாய்;ஏக்கத்திற்குப் பந்தமாய்! கண் முன்னே கட்டிய வீடுத் தரையில் வீழ;கண்களில் அப்பிக்கொண்டவெறுமை;யாருக்கும் வேண்டாம் இந்தக்கொடுமை! பிள்ளைக்கு பால் இல்லாமல்;பித்துப் பிடித்து – எங்கள்சத்துக்கள் தீரும் வரைக்கத்தினாலும் எட்டாது;உலகத்தின்...

என்னை மறந்திட...

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
  நீ எதிலும் தோல்வியடைவதில், துளியும் விருப்பமில்லை எனக்கு... நீ என்னை மறக்க முயற்சிக்கும் எல்லா வழிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்... ஆனால் நீ மறந்தபின், மறக்காமல் சொல்லிக்கொடு... எப்படியெல்லாம் முயற்சித்தாய்? என்னை மறந்திட...!                                                                ...

சராசரி...

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
  மணம் கொண்ட மழலையிலும்முகம் சுளிப்பேன்; அப்பிக்கொண்டக் கறுப்பால்;அழுது அடம்பிடிப்பேன்;அன்னையிடம்! தோல் கொண்ட நிறத்தால்துவண்டு போகும் என் தோள்கள்; வெள்ளைத் தோலைக் கண்டுகொள்ளை போகும் மனம்; பொங்கி வரும் அழுகையைப்பொத்திக் கொள்வேன் தினம்! ஆறுதல் சொல்லி அன்னை அணைத்துக் கொண்டு கதைப்பாள்;அழகுச் செல்லம் நீதான் என்று ஆணியாய் மனதில் அடிப்பாள்!தாழ்வாய் போன மனப்பான்மையால்; தயங்கித் தயங்கியே செய்வேன்;வெள்ளைக் கூட்டம் என்றாள்வெறுத்து வெளியே...

என்னுள் நீ,,,

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
  எதுகை மோனையோடு எழுத,,,என்னுள் வார்த்தையில்லை,, கண்ணே கனியமுதே என்றுஆறுதல் படுத்த நான்இப்போது அருகிலும் இல்லை,, இதயமாய் நீ இருக்கும் போதுஉனக்கெதற்கு என் இதயம்.. தென்றல் காற்றாய்,,சிலுசிலுக்கும் பனியாய்,, சில சமயங்களில் காட்டாறாய்,,எதையும் எதிர் பார்க்காத மேகமாய்,, உனக்குள் மட்டும் எப்படியடிஇத்தனை அவதாரம்,, அதனால் தானோ என்னவோ தமிழ் அன்னை உனக்குள் மட்டும் குடிபுகுந்தாள்,, கவிதையே,,தமிழ் கவிதையே  என்னை கவிதை பாட சொன்னால் நான் எங்கே செல்ல.. உன்னை...

கவியரசருக்கு கவிஞர் வாலி

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
கவியரசர் மறைந்த போது காவியக் கவிஞர் வாலி அவர்கள் வரைந்த கவிதாஞ்சலி... ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கண்ணதாசனே ! - என்அன்பு நேசனே !நீ தாடியில்லாத தாகூர் ! மீசையில்லாத பாரதி !சிறுகூடற் பட்டியில் சிற்றோடையாய் ஊற்றெடுத்துசிக்காகோ நகரில்சங்கமித்த ஜீவ நதியே ! உனக்கு மூன்று தாரமிருப்பினும் - உன்மூலாதாரம் முத்தமிழே ! திரைப் பாடல்கள் உன்னால் -திவ்வியப் பிரபந்தங்களாயின ! படக் கொட்டகைகள்உன்னால் பாடல் பெற்ற ஸ்தலங்களாயின ! நீ ஆண் வேடத்தில்அவதரித்த சரஸ்வதி !கண்ணனின் கை நழுவி மண்ணில்...

சிரிப்(பு)பூக்கள்

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
போடா, நீ முட்டாள் !குமாஸ்தா : போடா, நீ முட்டாள் ! டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் !மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்? நான் ஒருத்தன் இங்கே இருப்பதுஉங்களுக்கு தெரியலையா ?------------------------------------------------------------------------ சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு. கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.------------------------------------------------------------------------ பையன்: அப்பா ராமு என்னை...

சொந்த வாழ்க்கை

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
  என் அப்பாவின் அப்பாதந்தைக்காக உழைத்து ஓடாய்ப் போக....என் அப்பா எனக்காகவே தன் வாழ்நாளைசெலவிட நான் என்வாரிசுகளுக்காகஓடிக்கொண்டிருக்க.... என் மகன்அவனுடைய அடுத்த தலைமுறையின்வளர்ச்சிக்காகஓட்டப்பந்தயம் ஆரம்பிக்க.... இங்கே யார்தனக்காக வாழ ஆரம்பிக்கிறார்?                                      ...

காதலுக்கும், கல்யாணத்துக்கும்

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு..... சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள். நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவதுதம்பதிகள். பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல். இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம் உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல். அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம் காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது. டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள். எல்லா...

சிரிப்பு வெடிகள் சில...

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
கண்டதும்  காதலில்  விழுந்தேன்; அவளோட  அப்பா  இன்ஸ்பெக்டர்னு தெரிஞ்சதும்,  ‘பொத்’ தென  காலில்  விழுந்தேன்! “தலைவரே,  ஆள்  இல்லாத  ரயில்வே  கிராஸிங்ல  அடிக்கடி  ஆக்சிடென்ட் நடக்குதே...  இது  பத்தி  என்ன  நினைக்கறீங்க?”“அதான்  எனக்கும்  புரியல.  ஆளே  இல்ல;  எப்படி  ஆக்சிடென்ட்  நடக்குது?” “தலைவலின்னு  ஒரு  நாள்  லீவ்  எடுத்தே... ...

எப்படி சொல்வது?

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
எப்படி சொல்வது? காவியம் பாடும் தென்றலில்காதலாய் காத்திருந்தேன்...ஏங்கி மிளிரும் விழிகள் விண்மீன்களை சுற்றிவரஇதயமோ உன் நினைவுகளோடுஉள்ளிருப்புப் போராட்டமாய்.... எப்படி சொல்வது?என் காதலின் வீரியத்தை உன்னில் உணர்த்தவார்த்தைகளை தேடிகளைப்படைந்து காணாமலே... நாவினால்சுடும் சொற்களை வீசுகிறாய் - பின்இதழ்களால் மருந்திட்டு மறைக்கிறாய்...உன்னால் மட்டுமே இப்படியெல்லாம்என் காதல் கலவிக்கானதல்ல என்பதைஎப்படி சொல்வது? அன்பின் அரிச்சுவடியானவன் - சிலமணித்துளிகளில்முற்றுப்பெற்ற சிறுகதையாய்.......

சின்ன கவிதைகள்

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
நீ பிரிந்து சென்றபின்உன் நினைவுகளை எப்படி செலவழிக்க ....காகிதங்களில்கவிதையாகவா... கண்களில் கண்ணீராகவா ...தொண்டைக்குழி அடைக்கும் உன் நினைவுகளைஎந்த நீர் கொண்டு விழுங்குவது விடை கேட்டு வருகிறதுஎன் கண்ணீர்..... உணர்வுகளுக்கு சாவி போட்டு பறக்க விடு, உள்ளத்தை ஒருமுறையேனும் திறந்து விடு,உருவம் இல்லாத என் அன்புக்கு, உன் உயிர் உள்ள சொற்களேஉயிர் தரும். காயம் மாறினாலும்காயத்திற்கு வந்தகாரணம் மாறாது. என் நினைவுத் திரியில் நீ...உருகுகிறேன் நான் மெழுகுவர்த்தியாய் ....                                                ...

சிரிப்பு வருது

Posted by K. Ezhil Kumar | | Category: , | 0 comments
புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது...)"நர்ஸ், ஒரு மொபைல் ‏இருந்தா கொடுங்க." "எதுக்குடா செல்லம்?""நான் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டே‎னு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்!!" விவசாயம் பண்ணறது தப்பா சார்?""தப்பில்லை. ஏன் கேட்கிறே?" "நாங்க கடலை போட்டா மட்டும் திட்டுறீங்களே!"ஏண்டா.. கோயில்ல சிலையைத் திருடினே?" "திருடல ஐயா.. கோயில்ல கூட்டமா இருக்கேன்னு வீட்டுக்கு கொண்டு போனேன்.. இது தப்பா?" எல்லா ஒட்டப்பந்தயதுல நீங்க ஜெயிச்சிடுகிறிகளே, எப்படி? என்னை கடன்காரங்க...

தமிழ் ஜோக்ஸ்

Posted by K. Ezhil Kumar | | Category: , | 1 comments
மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்அப்பா: ஒண்ணுமில்லை மகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.அப்பா: ???????xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று. முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக்...

உன்னால் ஒரு கவிதை

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
  எனக்குள் மலரும் கற்பனைகளை  கண்திறந்து கவிதையாக வடிக்கிறேன். ஒவ்வொரு வார்த்தைகளையும்  தேடித்தேடி கோர்வையாக்குகிறேன்  அனைத்திலும் உன் பெயர் தான் வடிவமைகிறது. நிசப்தமான நேரங்களில் ஏனோ உன் பெயரை உரக்கக் கூற சொல்கிறது என் மனம். ஆனால் மௌனத்தை காயப்படுத்தாமல்  உதட்டுக்குள்ளே முணுமுணுக்கிறேன். தனிமையிலும் இனிமையாக உன்  பெயரை சத்தமின்றி  பாடலாக துதிக்கிறேன். ஒரு வார்த்தை அடங்கிய உன் பெயரை  இடைவெளியில்லாமல் ...

ஒரு கவிஞனின் எண்ணங்கள்...

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
  கடல் கடக்கக் கடவுச்சீட்டுகரம் வந்ததும்; மனம் குளிர்ந்து முகம் மலர்ந்த குடும்ப உறவுகள்! கரிசனத்தோடு நலம் விசாரிக்கும் ஊர்வாசிகள் விசா வந்ததா என்று! சிறு மூட்டைகளைக் கையில் ஒளித்துக் கொண்டு உறவுகளுக்கு அங்கே சேர்க்க எண்ணங்கொண்டு! பட்டியல் போட்டுக் காதைக் குடையும் வாண்டுகள்அது வேண்டும் இது வேண்டும் என்று!  பலகாரங்கள் பையை நிரப்பதுணிமணிகள் ஒதுங்கிக்கொள்ள;வியர்த்த கைகளில் கடவுச்சீட்டும்; விமானச்சீட்டும்! கட்டிப்பிடித்துக் கண்கள்...

நீ சம்மதித்தால்...!

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
  கால் வலிக்கும் வரை...உன் விரல் பிடித்து நடக்க வேண்டும்! இரண்டு வயது குழந்தையாக!எப்போதும் உன்னிடம் பேசிக்கொண்டிருக்க பிடிக்கும்...அதை விட அதிகம் பிடிக்கும் பேசாமல் உன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பது...!நீ ரயிலுக்காக காத்திருக்கிறாய் வந்து விட வேண்டுமென்று...நான் பிரிவிற்காக காத்திருக்கிறேன் வந்து விடக் கூடாதுஎன்றுஎன் இறக்கும் தருணம் உன் மடியில் இருக்கும் தருணமாய் வரம் கொடுஉன் தோள் சாயும் உரிமையை விட்டுத்தருகிறேன்...                                                        ...

விழி தேடும் வேளையில்

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
விழி தேடும் வேளையில்,மின்னலாய் வருகிறாய் , தேடியலைகிறேன்என் காதலின் தடங்களை......நீ விட்டுச் சென்ற மீதி உயிர் கரைந்தோடுகின்றது,நொடிகளை விட அசுர வேகமாய்!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ காதல் வேண்டாம் அன்பே .....உன் உடைக்க முடியா பதிலில்தோற்றுப்போய், இது நட்பு என்றேஒத்துக்கொள்கிறேன்.மீண்டும் வா! நொறுங்கிப் போன என் கனவுகளையும்,மீதமிருந்தால், இதயத்தையும்ஒட்டிப்பார்த்து உயிர்க்கொடுக்க முயற்சி செய்யலாம் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~  அவன் வரப்போவதில்லை, இறுதிவரை வரப்போவதில்லைஎன்று...

தாய்மை

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
  அம்மா, அணுவைச் சிதைத்து ஏழ்கடலைப் புகட்டிப் பொதுவாய் நின்ற ஓர் இன்பக்கொள்கை! அம்மா...! உலக வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஓர் உண்மை உயிர்பெற்று உலவுகிறது இவ்வுலகில்...! அம்மா என்ற மூன்றெழுத்து , மனம் என்ற மூன்றில் பிறந்து, உயிர் என்ற மூன்றில் கலந்து, தாய்மை என்ற மூன்றில் முடிசூடிக்கொள்கிறது, இவ்வுலக உறவுகளிடம்...! ஆயிரம்கோடி எழுத்துக்கள் இருந்தும் வர்ணிக்க முடியாத வார்த்தைகளால் வேயப்பட்ட ஓர் அன்புக்கூரை, அம்மா...! ஆண்டாண்டு...

அன்பு

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
  அன்பின் அடையாளம் கண்ணில் புணரும்!கண்ணையும் குருடாக்கி என் அன்பை புண்படுத்த புறப்பட்டு வந்தாய்! அன்புக்கு அர்த்தம் தெரியாத உன்னிடத்தில் அன்பை யாசித்து நின்ற என்னையேஅர்த்தம் தெரியாதவனாக்கி விட்டாயே! உன் தாயைவிட ஒரு படி மேலானவன் ...உன்னை என் இதயக் கருவில் சுமப்பதா...

Saturday, December 4, 2010

என் அம்மாவிற்கு எழுதிய பிறந்த நாள் வாழ்த்து

Posted by K. Ezhil Kumar | Saturday, December 4, 2010 | Category: | 0 comments
  எத்தனை சொந்தம் என் வாழ்வில்   வந்தாலும் அம்மா  உன்  ஒற்றை பார்வையின்  பந்தம்  எதுவும்  தந்ததில்லை   உன்  கண்ணீரை  எல்லாம்  சிரிப்பில்  மறைத்தாய்  அம்மா  இத்தனைநாளும்  அது  எனக்கு  விளங்கியதில்லை  நான் வளரும்  ஒவ்வொரு  நொடியும்...

குடும்பத்தினருக்கு ஒரு மடல்...

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
  பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள், புது மனைவி, அரட்டை அடித்த நண்பர்கள் காலாற நடந்து திரிந்த கிராமம்... எல்லாம் விட்டுப் பிரிந்தோம் - எம்மை எதிர்பார்த்து  நிற்கும் குடும்பத்தைக் கரையேற்றுவதற்கு... சொர்க்க சுகத்தைத் தரும் சொந்தங்களை சோர்வுறாமல் காப்பதற்கு தோள் கொடுத்தது வெளிநாடு தான்... இன்று நரகத்தில் இருந்தாலும், இறுதிவரை சொர்க்கத்தில் இருப்பதற்கு ஆசையுண்டு. இதனாலேயே இன்று இங்கு இடி தாங்கிகளாகி விட்டோம். பிரிவு என்பது கொடுமை தான்...

என் இனியவனே

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
  ஒவ்வொரு எழுத்தாய் உந்தன்பெயரை எழுதிப் பார்க்கிறேன் பிடித்த முதல் கவிதையாய்தெரிவதென்ன என் காதலனே அழகுச் சித்திரத்தின் உன் முகம்என்றும் மறையாமல் எந்தன்இதயத்தில் வரையப் பட்டிருக்கிறதே இதுவென்ன என் ஓவியனேகரை சேர துடிக்கும் அலையைப் போல என் மனம் உனைச் சேர பாய்வதென்னஎன் பாவலனே என்னை மறந்து நான்தனிமையில் சிரிப்பதென்ன தனித்துவமாய் ஏதேதோசிந்திப்பதென்ன காகித பக்கங்கள் எங்கும்கவிதை என்ற பெயரில் நான்கிறுக்குவதென்ன என் கவிஞனே உன் நினைவுகளில்...

மழையே!

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
  சொட் சொட் சொட்டும் மழையேஎனை தொட்ட மழையேநீ எங்கே சென்றாயோ என் நெஞ்சை கொன்றாயோ பூ மீது முத்தாய் இருந்தாய் புல் மீது மொட்டாய் இருந்தாய் சூரியனை கண்டதும் ஏன் பஞ்சாய் பறந்தாய்?  வெள் வெள் வெள்ளி நிலவே வானத்து வெள்ளி  நிலவே உன் அழகில் சிலிர்த்து தான் நட்சத்திரம் ஓடி ஒழிந்ததோ...நீ மட்டும் அழகா? சூரியனுக்கு நீ மட்டும் தான் அழகா?...

வார்த்தைகளும் எதிர்பார்ப்பும்

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
நிலவின் ஒளியில் பேசி களித்திருந்த நாட்கள்பல - இன்றோ பௌர்ணமி நிலவும் ஒளி வீசவில்லை - நீ இன்றி ஒளி வீச நிலவு கூட மறுக்கிறது !!! காத்திரு வருவேன்சில நாளில் என்றாய் - காத்திருக்கிறேன் இன்றும் உனை எதிர்பார்த்து !!!! *************************** ***************************கொல்லும் என எண்ணினேன் - உணர்ந்தேன் இன்று வார்த்தைகளை மௌனம் மிஞ்சும் என்று !!! மௌனமே எனைக்கொல்லும் ஆயுதமோ - பேசிவிடு என்னிடம் நான் இறக்கும் முன் !!!!                  ...

உண்மைக் காதல்

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
  ஒருமுறை பிறந்தேன்உலகை காண்பதற்கு அல்ல உன் அழகை காண்பதற்கு....ஒருமுறை வளர்ந்தேன் இளமை காலத்திற்கு அல்லஉன் வருகை காலத்திற்கு.... ஒருமுறை தவித்தேன்இசையை கேட்பதற்காக அல்லஉன் குரலை கேட்பதற்காக.... பலமுறை துடித்தது என் இதயம்உயிர் வாழ்வதற்காக அல்ல உன்னோடு வாழ்வதற்கு...                           இனியவன் ...

காதல் பூவே காதல்

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
காதலே உன்னை வலைபோட்டு தேடியதில்லை…சுவாச காற்றிலும்  உன் பெயர் சொல்லியதில்லை…உணர்வில் கூட காதல்எண்ணம் இருந்ததில்லை… காதல் கொள்ள இதுவரைஆசை மனதில் வந்ததில்லை!~~~~ புதுசாக பூத்த காதல் – அதிசயமாய்என்னை மாற்றிய போதும் – மனதிலேகோலங்கள் அழியாமல்  உன் முகம் அதிலே தெரியுதடா!~~~~புதியதாக என் மனதில் நீ பிறந்தாய் அன்று காதல் பூவை என்னில் மலரவைத்துஎண்ணங்கள் அத்தனையும் உனக்காக மாற்றிவிட்டு உன் காதலியாய் என்னை உருமாற்றி செல்கிறாய்!~~~~இதமான மலர்க்கூட்டம் இணையக் கேட்டேன் வெட்கத்தில்...
Pages (20)123456 Next