Wednesday, September 4, 2013

ஆளாக்கிய அன்னை!

Posted by K. Ezhil Kumar | Wednesday, September 4, 2013 | Category: |


தாமஸ்
 ஆல்வா எடிசனை அவரது பள்ளிஆசிரியர் எதற்கும் 
தகுதியற்றவர்  என்று கூறிவிட்டார்.
டாக்டர்கள் எடிசனை சோதனை செய்து பார்த்துவிட்டு எடிசனின் தலை அமைப்பு இயற்கைக்கு மாறாக அமைந்திருக்கிறது எனவே இவர் விரைவில் பைத்தியமாகிவிடுவார் என்று கூறினார்கள்.
 
ஆனால் எடிசனின் தாயாரோ எடிசனைப் பெரிய ஆளாக்குவேன் என்னும் உறுதியோடு அவருக்குப் பாடம் கற்பித்தார்.
  
அந்தத் தாயாரின் விடாமுயற்சியாலும்,உழைப்பாலும் எடிசன் உயர்வு பெற்றார். தாயின் கனவும் பலித்தது.அந்த எடிசனே பின்னாளில் எல்லோராலும் பாராட்டப்பட்ட பெரிய விஞ்ஞானி ஆனார்.
 
"மனிதன் கடன் பட்டிருப்பது மூளைக்கல்ல;முயற்சிக்கே,
கடவுள் வரங்களை விற்பனை செய்கிறார், மனிதர்களின் முயற்சியே அவற்றின் விலை என்னும் அற்புத வாக்கை  
கூறியவரும் தாமஸ் அல்வா எடிசன் தான்.
 
அன்புடன்,
ஸ்ரீமாரியா.

Currently have 0 comments:


Leave a Reply