Wednesday, September 4, 2013

சந்தித்து விட்டேன்.. என் மரணத்தை...!

Posted by K. Ezhil Kumar | Wednesday, September 4, 2013 | Category: |

எல்லாவற்றிலும்.. உன்னோடு எல்லாவற்றிலும்..
உன் பாதம் பின்பற்றி வரவே..
படைக்கப்பட்டதாய்.. உணர்ந்தேன்...
நீ என்னுள் நுழைந்த கணத்தில்...!

உன் வெயிலுக்கு
என் அன்பே நிழலாக...

என் வெய்யிலுக்கு
உன் நிழலே குடையாக..

என் நெஞ்சில் உன்னை தாங்கி...
என் பிள்ளையாய் அணைத்துக்கொள்ள...

உன் மார்பில் என்னை கிடத்தி
உன் குழந்தையாய் உன்னுள்
பிணைத்துகொள்ள

உன் கரம் பற்றி...
எல்லாமும் உனக்கே அர்ப்பணித்து
வாழ அத்தனை ஆசைகள்...
அத்தனை ஏக்கங்கள்..
நிறைத்திருந்தேன்.. நெஞ்சில்...

கடலில் கலக்க வந்த தூசியை
கரையில் தூக்கி வந்து வீசும்
ஒரு அலையை போலே..

என் நேசத்தை
நீ தூக்கி வீசி போன கணத்தில்
உயிரோடு சந்தித்து விட்டேன்..
என் மரணத்தை...!
நட்புடன்
Join Only-for-tamil
ஸ்ரீ வசந்தா

Currently have 0 comments:


Leave a Reply