Wednesday, September 4, 2013

மனதைத் தொட்ட வரிகள்!

Posted by K. Ezhil Kumar | Wednesday, September 4, 2013 | Category: |


Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத்
திருமணம் செய்து கொள்ள வேண்டாம்.
உழைத்தால் பணம் நிறைய
சம்பாதிக்கலாம்.

Ø உழைப்பு வறுமையை மட்டும்
விரட்ட வில்லை; தீமையையும்
விரட்டுகிறது.

Ø ஒரு தகப்பனார் பத்துக்
குழந்தைகளைக் காப்பாற்றலாம்.
ஆனால் பத்துக் குழந்தைகள்
ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும்
என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல்
மிதித்தாலும் மிதிபட்ட
எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக
எரிந்தாலும் அதன் அடியில்
சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.

Ø சுயநலம் என்பது சிறு உலகம்.
அதில் ஒரே ஒரு மனிதன்தான்
வாழ்கிறான்.

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த
காரியத்தில் நிலையாக இருத்தல்
Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத்
தெரியாது. பணம் இல்லா விட்டால்
யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால்
அறிவு வெளி செல்கிறது.

Ø நண்பனைப் பற்றி நல்லது பேசு.
விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும்
சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான்
என்பது இல்லை!

Ø நாக்கு கொடிய மிருகம்.
அதை எப்போதும் கட்டியே வை!
Ø பறக்க விரும்புபவனால் படர
முடியாது.

Ø மகிழ்ச்சியான
வாழ்க்கை என்பது தடைகளற்ற
வாழ்க்கை அல்ல,
தடைகளை வெற்றி கொண்டு வாழும்
வாழக்கை.

Ø ஒரு கதவு மூடப்படும்
போது மற்றொரு கதவு திறக்கிறது.
ஆனால், நாம் மூடப்பட்ட
கதவையே பார்த்துக்
கொண்டு திறக்கப்படும்
கதவை தவறவிடுகிறோம்.


Rajesh india
alwayssmileon@gmail.com>

Currently have 0 comments:


Leave a Reply