Sunday, December 5, 2010

சொந்த வாழ்க்கை

Posted by K. Ezhil Kumar | Sunday, December 5, 2010 | Category: |

 
என் அப்பாவின் அப்பா
தந்தைக்காக உழைத்து
ஓடாய்ப் போக....

என் அப்பா எனக்காகவே
தன் வாழ்நாளை
செலவிட

நான் என்
வாரிசுகளுக்காக
ஓடிக்கொண்டிருக்க....

என் மகன்
அவனுடைய அடுத்த
தலைமுறையின்
வளர்ச்சிக்காக
ஓட்டப்பந்தயம் ஆரம்பிக்க....

இங்கே யார்
தனக்காக வாழ
ஆரம்பிக்கிறார்?

                                      நட்புடன்...
                             ரேவதி

Currently have 0 comments:


Leave a Reply