Sunday, December 5, 2010

சிரிப்பு வெடிகள் சில...

Posted by K. Ezhil Kumar | Sunday, December 5, 2010 | Category: |

கண்டதும்  காதலில்  விழுந்தேன்;
அவளோட  அப்பா  இன்ஸ்பெக்டர்னு தெரிஞ்சதும்,  ‘பொத்’ தென  காலில்  விழுந்தேன்!


“தலைவரே,  ஆள்  இல்லாத  ரயில்வே  கிராஸிங்ல 
அடிக்கடி  ஆக்சிடென்ட் நடக்குதே...  இது  பத்தி  என்ன  நினைக்கறீங்க?”

“அதான்  எனக்கும்  புரியல.  ஆளே  இல்ல;  எப்படி  ஆக்சிடென்ட்  நடக்குது?”

“தலைவலின்னு  ஒரு  நாள்  லீவ்  எடுத்தே... 
ஓ.கே!  கால்  வலிக்கு  ஏன் ரெண்டு  நாள்  லீவ்  கேக்கறே?”

“தலை  ஒண்ணுதான்  இருக்கு;  ஆனா  கால்  ரெண்டு  இருக்கே...”
“சரி  சரி... பல்  வலி  வராம  பார்த்துக்கோ!”

இந்த  ஒற்றன்  வேலைக்குப்  புதுசா...?
எப்படி  மன்னா  கண்டு பிடித்தீர்...?
போர்  அபாயம்...  ஓடுங்கள்’  என்று  குரல்  தராமல், 
கிளம்புங்கள் போர்க்களத்திற்கு’ என்று  உளறுகிறானே...”

போர்க் களத்தில்  முள்  குத்தியதால்  மன்னர்  துடிக்கிறார்!”
யாரிடமாவது  குண்டூசி  வாங்கி  முள்ளை  எடுப்பதுதானே?”
வேண்டாம்.  போர்க் களத்தில்  பின் வாங்கினோம்  என்ற  அவப்பெயர்  வந்துவிடும்!”

மாறுவேடத்தில்  மன்னர்  நகர்வலம்  வந்தது  வேஸ்ட்  ஆகிவிட்டதா?”
ஆமாம!  ‘மன்னர்  மாறுவேடத்தில்  வருகிறார்...  பராக்...  பராக்...!’ 
என்று  ஒரு  சேவகன்  கத்தித்  தொலைத்துவிட்டான்!”

மன்னா!  உடனடியாக  உங்கள்  எடையைக்  குறையுங்கள்!”
“ஏன்?”
“180-ம்  கிலோத்துங்க  சோழன்  என்று  அழைக்கிறார்கள்!”

அரண்மனைக்குள்  இருப்பதற்கு  நேர்  எதிராக  மன்னர்  வெளியில்  இருக்கும்போது  நடந்துகொள்வார்.”
“எப்படி?”
“அரண்மனையில்  ‘யாரங்கே’ என்று  அதிகாரமாக  கேட்பார். 
நகர்வலம்  போக  வெளியே  வந்தால்  ‘அங்கே  யாரு’ என்று  பம்முவார்!”

புறமுதுகிட்டு  ஓடிவரும்போது  மன்னர்  தனியாக 
ஓடி  வராமல்  வீரர்களுடன்  சேர்ந்தே  ஓடி  வருகிறாரே?”

ஒன்றுபட்டால்  உண்டு  வாழ்வு  என்பதைக்  கடைப் பிடிக்கறாராம்!”

Currently have 0 comments:


Leave a Reply