Sunday, November 14, 2010

புகைப்பதனால் ........... Smoking

Posted by K. Ezhil Kumar | Sunday, November 14, 2010 | Category: |




நெஞ்சம் பட்ட காயத்துக்கு

நெரிப்பிலா மருந்துண்டு?

புகைவிட்டு ஆற்றிக்கொள்ள

பெண்ணிலா பகையுண்டு?

பத்து விரலையும் பதறடித்துழை

பதினொராம் சிகரட்டைப் புதை நல்லதையே கதை...

தேவையை மட்டும் விதை..



கலவை செய்யும் போதையெல்லாம்

உன் உடலை சலவை செய்யும்.

உள்ளே நுழைந்து

சாவையும் அழைத்துவரும்..



பஞ்சி வரை எரியும் நெருப்பு

நெஞ்சி வரை வந்து சேரும்

உக்கலும் இருமலும்

உன்னோடு விளையாடும்...



ஆயுள்கள் சொல்கிறது

ஆயுளைக் குறைக்குமென்று

நுரையீரல் சொல்கிறது

சல்லடை ஆகுதென்று..



நிறுத்தி விடு...

நிலைத்து விடு...

மனிதனாய் வாழ்ந்து விடு....

போதையை மறந்து விடு......



நாண்பா..!

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட சில விநாடிகள்தான் வாழ்க்கை

புரிந்து கொள்



நட்புடன்.. பாஸ்கர்

Currently have 2 comments:

  1. Can you get mp3 on antismoking in tamil so that it can serve its cause.
    It is good.
    Good work


Leave a Reply